கடுக்காய்

 

கடுக்காய் 

கடுக்காய் பயன்கள்: தினமும் காலையில் இஞ்சிச்சாறு, பகலில் சுக்கு காபி, இரவில் தூங்குவதற்கு முன், விதை நீங்கிய கடுக்காயைத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தினமும் அருந்தி வர உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும், கபம் சமநிலைப்படும். இதற்கு கடுக்காய் (kadukkai) பெரிதும் உதவுகிறது.

இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்பட்ட மருந்துகள் ஆண், பெண் உறவுகளை பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை.

மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால், சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள்.

இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும்.

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் (kadukkai) என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப் பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் ஃபாஸ்ட்ஃபுட் உணவுகளைச் சாப்பிடாமல் கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ போன்றவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது.

கடுக்காய் கல்பம்:

கடுக்காய் கல்பம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

1.      அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய் (kadukkai)

2.      அரை லிட்டர் பசும்பால்

கடுக்காய் கல்பம் செய்முறை:

Kadukkai podi thayarippu: பாலில் கடுக்காயைப் (kadukkai) போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும்.

மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும்.

கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும்.

இந்தக் கடுக்காய் கல்பத்தை (kadukkai ) ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை (kadukkai ) மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

அதிமதுரம்