கடுக்காய்
கடுக்காய் கடுக்காய் பயன்கள் : தினமும் காலையில் இஞ்சிச்சாறு , பகலில் சுக்கு காபி , இரவில் தூங்குவதற்கு முன் , விதை நீங்கிய கடுக்காயைத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தினமும் அருந்தி வர உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும் . அதாவது மலச்சிக்கல் நீங்கும் , கபம் சமநிலைப்படும் . இதற்கு கடுக்காய் (kadukkai) பெரிதும் உதவுகிறது . இஞ்சி , சுக்கு , கடுக்காயில் செய்யப்பட்ட மருந்துகள் ஆண் , பெண் உறவுகளை பலப்படுத்தி , குழந்தைப்பேறு தரக்கூடியவை . மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால் , சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள் . இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து . ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து , குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும் . காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம் , மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம் , இரவில் கடுக்காய் கல்பம் (kadukkai) என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் , அடுத்த சில மாதங்களில் குழந்தைப் பாக்கி