Posts

Showing posts from August, 2020

கடுக்காய்

  கடுக்காய்   கடுக்காய் பயன்கள் : தினமும் காலையில் இஞ்சிச்சாறு , பகலில் சுக்கு காபி , இரவில் தூங்குவதற்கு முன் , விதை நீங்கிய கடுக்காயைத் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து தினமும் அருந்தி வர உடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும் . அதாவது மலச்சிக்கல் நீங்கும் , கபம் சமநிலைப்படும் . இதற்கு கடுக்காய் (kadukkai) பெரிதும் உதவுகிறது . இஞ்சி , சுக்கு , கடுக்காயில் செய்யப்பட்ட மருந்துகள் ஆண் , பெண் உறவுகளை பலப்படுத்தி , குழந்தைப்பேறு தரக்கூடியவை . மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால் , சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள் . இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து . ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து , குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும் . காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம் , மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம் , இரவில் கடுக்காய் கல்பம் (kadukkai) என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் , அடுத்த சில மாதங்களில் குழந்தைப் பாக்கி

அதிமதுரம்

  அதிமதுரம்   அதிமதுரம் பயன்கள் (Athimathuram benefits) – உதிர போக்கு நிற்க : கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன் ஏற்படும் உதிரப் போக்கு பிரச்சனைகளுக்கு அதிமதுரம் (licorice benefits) ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது . எனவே கருவுற்ற பெண்கள் அதிமதுரம் (licorice powder) மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து , 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும் . அதிமதுரம் பொடி – சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம் : சுகப்பிரசவம் ஆக பாட்டி வைத்தியம் அனைத்து பெண்களுக்கும் பிரசவ காலங்களில் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்றுதான் ஆசை படுவார்கள் . இருப்பினும் சிலருக்கு சுகப்பிரசவம் ஆகும் , சிலருக்கு சிசேரியன் சிகிக்சை மூலம் குழந்தையை பெற்றெடுப்பார்கள் . இருப்பினும் கருவுற்ற பெண்கள் கற்பகாலங்களில் அதிமதுரம்